Saturday, June 6, 2009

I AM COMMITTED.

வணக்கம். எல்லாம் ஒரு சந்தோசம் கொடுக்குற செய்தி தான். எனக்கு கடந்த ஜூன் 4 தேதி (4/6/2009), பத்மப்ரியா உடன் நிச்சியதார்த்தம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ சிறப்பாக நடந்தது.

இந்த சம்பந்தம் சரியாக ஒரு வாரத்தில் பேசி மற்றும் பார்த்து முடிந்தது. எனக்கு பார்த்த முதல்பெண் பத்மப்ரியா தான், அதே மாதிரி அவர்களுக்கு பார்த்த முதல் மாப்பிளையும் நான் தான்.

சரி நிச்சியதார்த்தம்ன சும்மா பெரியவங்க தட்ட மற்றும் exchange பண்ணுவாங்கனு நினைச்சேன். பார்த்த தீடிர்னு என்னைய வீட்டுக்குள்ள கூப்பிட்டு மாலை போட்டு, பொண்ணோட ஜோடியா நிற்க வைச்சிட்டாங்க.அடுத்து பெரியவங்க காலில் ஜோடிய ஆசிர்வாதம் வாங்கினோம், பதிலுக்கு அவங்க சந்தனம், குங்குமம் வைக்கிறேன்னு சொல்லி எங்க ரெண்டு பேரு நெத்திய பதம் பார்த்துட்டாங்க.

இருக்குரதுலே பெரிய கொடுமை, வீடியோ லைட் தாங்க. அந்த லைட் கொடுமையை தாங்க முடியல. ஒரு அரைமணி நேரம் வீடியோ எடுத்துருப்பாங்கனு நினைக்கறேன். வீடியோ எல்லாம் எடுத்து முடிஞ்சு அடுத்த 10 நிமிசத்தில தான் கண்ணு ஒழுங்கா தெரிய ஆரம்பிச்சது. கல்யாணத்தில் இந்த வீடியோ கொடுமையை எப்பிடி தாங்க போறேனோ.

நான் கொஞ்சம் பிஸி ......அப்புறம் பார்க்கலாங்க.............

Monday, April 6, 2009

லட்சிய திராவிடமுன்னேற்ற கழகம் ..நம்ம டி ஆர் கட்சி

இது ஒரு மொக்கை பதிவு. மொக்கையிய் மொக்கையாக பார்க்கவும்.

தேர்தல் கலை கட்டுது. எல்லா கட்சியும் கொள்கை என்பதை கழிவறையில் கொட்டி விட்டு தண்ணி ஊற்றாமல் கூட்டணி அமைத்து விட்டார்கள். மீதி இருப்பது நம்ம டி.ஆர் கட்சி தான். அவரோட கட்சி நிலவரம் என்ன என்று பார்ப்போம்.

ரெண்டு நாள் முன்னாடி டி.ஆர், சோனியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு , டி.ஆர் பி.பி.சீக்கு அளித்த பேட்டியில்,
--------------------------------------------------------------------------
கொஞ்ச நேரம் முன்னாடி தொலைபேசியில் பேசிய ஒபாமா என்னைய முதலைமச்சர் சாரி பிரதமர் ஆகனும்னு காலில் விழாத குறையாக கேட்டு கொண்டார். அப்பிடி ஆகவில்லை என்றால், அவர் அமெரிக்கா அதிபர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று சமிபத்தில் நடந்த ஜி-ட்வென்டி மாநாட்டில் முழக்கமிட்டுள்ளார். என்னோட அருமை அமெரிக்காவிற்கு புரியுது ஆனால் இத்தாலிக்கு புரியல.

நான் என்ன சோனியா சோனியா சொக்க வைக்கிற சோனியா என்றா பாடினேன், இல்லையே நான் அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே என்று தானே பாடினேன் (தமிழ்நாட்டு அம்மா இல்ல, இந்தியா அம்மா). பிறகு ஏன் என் வாரிசு குறலரசன்னுக்கு நிதி துறை மந்திரி தர மாட்டேன் என்கிறார் சோனியா , தேர்தலில் வின் பண்ணின பிறகு (அடாக் கோய்யல, தேர்தல இனும் ஆரம்பிக்கல அதுக்குள்ள மந்திரியா). இது ப.சிதம்பரம் பண்ணின சதி வேலை தான்.

என்னைய லல்லு கூப்பிட்டாரு , மாயவதி கூப்டாங்க, பவுடர் பேபி தயாநதி மாறன் ஒத்தைக்கு ஒத்தை வரியான்னு கூப்பிடர்ர்று , ஜெயபிரத அவங்க கன்னத்தில் பல்லான்குழி விளையாட கூப்டாங்க, முருகதாஸ் ஹிந்தி கஜினியில் நடிக்க கூப்பிட்டாரு, ரித்தேஷ் கானல்நீர் படத்துல என்னைய டூப் போட கூபிட்டார்று, இவங்கள எல்லாம் விட்டுட்டு சொனியவோட பேச்சுவர்த்தைக்கு போனது தப்பா போச்சு.
----------------------------------------------------------------------------

இதை அடுத்து தென்மேற்கு பருவ காற்று தேனி பக்கம் வீசுவது போல அத்வானி காற்று நம்ம டி.ஆர் பக்கம் வீசுகிறது. வழக்கம் போல அத்வானி உடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிய, டி.ஆர் பி.பி.சீயிடம்,

-------------------------------------------------------------------------------

நிருபர் : அத்வானி உடன் பேச்சுவார்த்தை எப்படி போச்சு?

டி.ஆர்: நான் அவர் ரூமில் நூளைந்த உடனே, எனக்கு குருவி ரொட்டி கொடுத்து வரவேற்பு அளித்து எனக்கு மகிழ்ச்சி அளித்தது. நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் இன்னும் ஒரு ரதயாத்திரை நடத்தினால் நான் சக்கரமாக இருப்பேன் என்று.

நிருபர்: வேற என்ன பேசினீர்கள்?

டி.ஆர்: நான் அத்வானி கிட்ட எனக்கு கட்டிடம் உடைப்பதில் முன் அனுபவம் இருப்பதாக சொன்னேன். மற்றும் எனக்கு சொந்தமாக ரெண்டு புல்டோவ்செர் இருப்பதாக சொன்ன உடனே அவர் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்ல.
ஏற்கனவே என்னோட வாரிசு சொம்பு சி.இ.டி நகர் பையன்களிடம் மூக்கு உடை பட்டது உங்கள்ளுக்கு யாபகம் இருக்கும் என்று ந்ம்புகிறேன்.

நிருபர்: இவ்வளவு நனறாக பேச்சுவார்த்தை நடந்தும், ஏன் பி.ஜெ.பிஇடம் கூட்டணி அமையவில்லை.

டி.ஆர்: நான் பூங்கா நகர் தொகுதியை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடாக மாற்றி அதில் என்னை பிரதமராக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் பார்கூரை வேண்டும் என்றால் தனி நாடாக மாற்றி தருகிறேன் என்று சொன்னார். அதற்கு நான் ஒப்பு கொள்ளவில்லை. அதனால் தான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
-------------------------------------------------------------------------------------

பேட்டி முடிந்து டி.ஆர் வெளியே வர, கார்த்திக்கும், சரத்குமாரும் அவரை வரவேற்க மாலையுடன் நின்று கொண்டு இருந்தனர்.

Friday, March 20, 2009

வணக்கம். முதல் பதிவு . இது தான் சென்னை

எல்லாருக்கும் வ்ணக்கம். இது அடியேனின் முதல் பதிவு. எனக்கு தமிழ் தட்டச்சு புதிது . அதனால் பிழை இருந்தால் கொஞ்சம் மன்னித்து அருளும் படி வேண்டுகிறேன்.

என் சொந்த ஊர் படந்தால் என்ற கிராமம், சாத்தூர்க்கு அருகில். கடந்த நாலு வருடங்களாக குப்பை கொட்டுவது சிங்கார சென்னையில்.

நம்ம பயலுக சொல்லுவாங்க, சென்னையில் எதிர் வீட்டுல இருக்கறவங்க பேரு கூட தெரியாம மக்கள் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க அப்பிடின்னு. கிராமத்தான் என்னைய மாதிரி ஆளுங்களும் இப்ப இந்த மாதிரி மாறிட்டு இருக்காங்க [நான் உட்பட]. சமீபத்தில் நான் சந்தித்த நிகழ்வு என் மனதை மிகவும் பாதித்து விட்டது.

நான் தங்கி இருப்பது கே.கே நகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில்.அன்று சண்டே, வழக்கம் போல நாயரிடம் வம்பு வளர்த்து விட்டு, மதிய சாப்பாட்டுக்கு அசைவம் வாங்கி விட்டு வந்து கொண்டு இருந்தேன். அப்போது பக்கத்து வீட்டில் மாதவன் படம் ஓடி கொண்டு இருந்தது. நானும் நண்பர்களும் நன்றாக சாப்பிட்டு விட்டு ஜோடி நம்பர் ஒன் விஜய் டிவ்யில் பார்த்து கொண்டு இருந்தோம். நணபன் பாண்டி வழக்கம் போல கே தொல்லைகாட்சியில் வானத்தை போல திரைப்படம் பார்க்க வேண்டும் என்றான். சரி என்று வேறு வழி இல்லாமல் நானும் பார்த்து கொண்டு இருந்தேன். உண்டா களைப்பில் நனறாக உறங்கி விட்டேன். மணி ஆறு, எழுந்து நாயர் கடையில் டி குடிக்கலாம் என்று கிளம்பினேன்.

பக்கத்து வீட்டில் பெரிய கூட்டம். என்னடா ஆச்சு மதியம் ஒன்னும் இல்லையே, இப்ப என்னாச்சு என்று பார்த்தேன். பார்த்தால் பக்கத்து வீட்டு பாட்டி பிணமாய் கிடத்த பட்டு இருந்தார்கள்.
பக்கத்து வீட்டில் என்ன நடக்குது என்று கூட தெரியாமல் நான் ஜோடி நம்பர் ஒன் மற்றும் சில பல நிகழ்ச்சி தொல்லைகாட்சி நிகழ்ச்சியை பார்த்து மகிழுந்து கொண்டு இருந்து இருக்கறேன். என்னைய நினைச்சு எனக்கே கோவம் வந்தது.
என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கறேன் என்று என்னை பற்றி நினைக்கையில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

என்னடா நீ எப்படி இருந்துகிட்டு சென்னை மேல பழி போடுறியானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது.